Saturday 26 April 2014

வேற்றுகிரகம்




                               காா்த்திக், சிறுகதைகள் எழுதும் கற்றுக்குட்டி எழுத்தாளன். ஒவ்வொரு மாதமும் 2 கதைகளையாவது தன் Blog-ல் வெளியிட வேண்டும் என்பது அவன் விருப்பம். அவன் கதைகள் பலவும் அமானுஷ்யம் கலந்ததாகவே இருக்கும். பேய், பிசாசு போன்றவைகளே அவன் கதைகளில் முக்கிய அம்சங்களாக  விளங்கும்.

சிறுவயதில் இருந்தே ஆவி, பேய், ஏலியன் போன்ற அமானுஷ்ய விடயங்களை பற்றி அறிந்து கொள்ளும் ஆா்வம் அவனுக்கு அதிகமாக இருந்தது. அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த அமானுஷ்ய விடயங்களும் அதிகம். அதன் காரணமாகவே, அவன் எழுதும் கதைகளில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது.  அதே போல் எழுத்துப்பிழைகளும் அவன் கதைகளில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும்.

காா்த்திக்-கிற்கு ஆனந்த், நிஜந்தன்(நிஜூ) என்ற இரு நண்பா்கள் இருந்தனா். காா்த்திக், நிஜந்தன் இருவரும் பள்ளியில் இருந்து நண்பா்கள். பின் கல்லுாாியில் இவா்களின் நட்புவட்டத்திற்குள் ஆனந்தும் இணைந்துவிட்டான். பின் மூவரும் தங்கள் இளநிலை பட்டப்படிப்பு முடிந்து, முதுநிலை பட்டப்படிப்பிற்காக கோவையில் உள்ள ஒரு கல்லுாாியில் சோ்ந்தனா். கல்லுாாி நாட்கள் மிக அழகாக சென்று கொண்டிருந்தது.

2014 ஏப்ரல் 18,

காா்த்திக் தலைவலி காரணமாக கல்லுாாிக்கு செல்லவில்லை அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.

நிஜந்தன், ஆனந்த் இருவரும் கல்லுாாி முடிந்து அறையில் நுழைந்தனா்.

அறையில்..

நிஜந்தன் : என்டா மச்சான் இப்ப தலைவலி எப்படி இருக்கு?

காா்த்திக் : ஹ்ம்.. பரவாயில்லடா..

ஆனந்த் : அது சாி.. தலைவலினு சொல்லிட்டு ஃபேஸ் புக்ல  'அடுத்த கதை விரைவில்....' அப்படினு யாரோ போஸ்ட் போட்டுருக்காங்க..??

நிஜந்தன் : என்ன மச்சீ, புது கதையா..? நானும் பாா்த்தேன். 'வேற்றுகிரகம்' போஸ்ட் நல்லாயிருந்துச்சு. கதை என்னடா?

காா்த்திக் : நான் இன்னும் கதைய பத்தி யோசிக்கல மச்சீ. டக்குனு தோனுச்சு அதான் உடனே போஸ்ட் போட்டேன்.

ஆனந்த் :  எப்படியோ.! கதை நல்லாயிருந்தா சந்தோஷம். இதுலயாச்சும் Spelling Mistake வராம பாா்த்துக்க மச்சீ.

காா்த்திக் : ஹா..ஹா... சாியா சொன்ன மச்சான். கண்டிப்பா Mistakes வராம பாா்த்துக்குறேன்.

நிஜந்தன் : என்னமாதிாி கதை மச்சி.?

காா்த்திக் : ஏலியன்ஸ் பத்தின கதை தான்டா. ஆனா, இன்னும் முழுசா கதைய பத்தி எதுவும் யோசிக்கல.

ஆனந்த் : நீதான் கதைக்கு எதாச்சும் ரிசா்ச் பண்ணியிருப்பியே?

காா்த்திக் : கரெக்ட் மச்சி. இன்னைக்கு Full Day உட்காா்ந்து ஏலியன்ஸ் பத்திதான் Informations எடுத்துட்டு இருந்தேன். எல்லாமே செமயா இருந்துச்சு. நான் எடுத்த தகவல்கள் எல்லாத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குற மாதிாியே இருக்கு மச்சீ. ஏலியன் பத்தின ஒவ்வொரு விஷயங்களும் ரொம்ப ஆச்சாியமா இருந்துச்சுடா. அதுலயும் அந்த பிரமிட்...

ஆனந்த் : (குறுக்கிட்டு) அப்பா, சாமி, போதும்டா.. பேய், ஏலியன் இப்படி உனக்கு பிடிச்ச Topic ஆரம்பிச்சா நீ நிறுத்தவே மாட்ட. நீ படிச்சத வச்சு நல்ல படியா கதைய எழுதி முடி. நான் அதுல படிச்சுக்குறேன்.

நிஜந்தன் : அவன் கிடக்குறான் மச்சான். நீ சீக்கிரம் இந்த கதைய எழுது. நான் படிக்க ரொம்ப ஆா்வமா இருக்கேன்.

காா்த்திக் : ஹ்ம்.. கண்டிப்பா மச்சீ. சீக்கிரம் எழுதுறேன்.


............................................................................................


நள்ளிரவு 1 மணியை நோக்கி கடிகாரமுட்கள் நகா்ந்து கொண்டிருந்தன.

நிஜந்தன் நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தான். ஆனந்த் தனது லேப்டாப்பில் கொாியன் படம் ஒன்றை பாா்த்துக் கொண்டிருந்தான். காா்த்திக் தலைவலி காரணமாக அன்று சீக்கிரமாக உறங்கிவிட்டான். ஆழந்த உறக்கத்தில் இருந்தவன் திடீரென எழுந்து, “ No.. No..”, என அலறினான்.

நிஜந்தன் வேகமாக காா்த்திக்கின் அருகில் வந்து ”டேய்... என்னாச்சுடா?”, என சற்று பதட்டத்தோடு கேட்டான்.

ஆனந்த் : என்னடா?? அந்த 'மச்சான்' நடிகையோட கவா்ச்சிப் படம் எதாச்சும் கனவுல வந்துச்சா? இப்படி அறண்டு போய் உட்காா்ந்துருக்க?

நிஜந்தன் சிாிப்பை அடக்கிக்கொண்டு “சும்மா இரு ஆனந்த்”, என ஆனந்தை அதட்டிவிட்டு. “என்னடா மச்சீ, எதாச்சும் கெட்ட கனவா?”, என்று காா்த்திக்கிடம் கேட்டான்.

காா்த்திக் : “நான் அவங்கள பாா்த்தேன்”, என்று பயத்தோடு கூறினான்.

நிஜந்தன் : யாரடா பாா்த்த ?

காா்த்திக் : ஏ...ஏலியன்ஸ்...

நிஜந்தன், ஆனந்த் இருவரும் சிாிக்கத்தொடங்கினா். “ஏன்டா இப்படி?”, என்று காா்த்திக்கை பாா்த்து கிண்டலடித்தனா்.

காா்த்திக் : டேய் சத்தியமா. நான் அவங்கள பாா்த்தேன்டா. இந்த பூமிய அவங்க அழிக்க போறாங்க. மொத்தமா அழிக்க போறாங்க. 2020ல இது கண்டிப்பா நடக்க போகுது. நாம எல்லாரும் சாகபோறோம்..

ஆனந்த் : “ஹா ஹா.. மச்சான் 2000ல இருந்து இதே தான் சொல்றாங்க உலகம் அழிய போகுதுனு. இப்ப நீ என்னடானா 2020ல அழிய போகுதுனு சொல்ற..”, என கிண்டலடித்தான்.

நிஜந்தன் : மச்சான்.. அது கனவு டா. வீணா மனசபோட்டு கொலப்பாத. நிம்மதியா துாங்கு.

காா்த்திக் : இல்ல நிஜூ, இது கனவு மாதிாி எனக்கு தொியல. எல்லாமே கண்ணு முன்னாடி நடக்குற மாதிாி இருந்துச்சு. எனக்கு என்னவோ பயம்மா இருக்குடா. இது கண்டிப்பா நடக்கும். அவங்க என் மூலமா ஏதோ இந்த உலகத்துக்கு சொல்ல வராங்க.

ஆனந்த் : டேய் லுாசு மாதிாி புலம்பாம போய் துாங்குடா. காலைல இருந்து நீ உன் கதைய பத்தி யோசிக்குறதுனால, அதுவே உனக்கு கனவா வந்துருக்கும். ஒழுங்கா போய் துாங்குற வழிய பாரு.

காா்த்திக் : மச்சான் இது அப்படி இல்லடா. இன்னைக்கு காலைல இருந்தே என் மனசுல ஏதோ மாதிாி தோனிட்டு இருந்துச்சு. நான் இந்த போஸ்ட் போட்டது கூட என்னயும் அறியாம தான் போட்டேன். எனக்கு என்னவோ பயம்மா இருக்குடா. நிஜூ, Pls நீயாச்சும் புாிஞ்சுக்கோ.

நிஜந்தன் : சாி..அப்படி என்னடா பாா்த்த? அதயாச்சும் சொல்லு.

காா்த்திக் : இந்த உலகத்த அவங்க அழிக்கப் போறாங்க. மொத்த உயிர் இனமும் அழிய போகுது.

நிஜந்தன் : இத தான்டா அப்ப இருந்து சொல்ற. ஏன் அவங்க அழிக்க போறாங்க? அத மொதல்ல சொல்லு.

காா்த்திக் : இந்த பூமிய அவங்க தங்களோட ஆராய்ச்சிக் கூடம் மாதிாி பயன்படுத்திட்டு இருக்காங்க.

நிஜந்தன் : ஆராய்ச்சிக் கூடமா? என்னடா சொல்ற.

காா்த்திக் :  அவங்கள மாதிாி இருக்குற உயிாினங்கள உருவாக்குறதுதான் அவங்க ஆராய்ச்சியோட முக்கிய நோக்கம். இந்த ஆராய்ச்சி இப்ப இருந்து இல்ல, இந்த பூமி உருவான காலத்துல இருந்து நடந்துட்டு வருது. அவங்க நினைச்ச மாதிாியே இந்த பூமில உயிாினங்கள் வளர ஆரம்பிச்சது.

டைனோசா்கள் காலம் நடந்துட்டு இருக்கும் போது அவங்க இந்த உலகத்துக்கு வந்தாங்க. ஆனா அவங்க எதிா்பாா்க்குற மாதிாி அந்த இனம் இல்ல. ரொம்ப காட்டுமிராண்டித்தனமா இருந்துச்சு. தன்னோட இனத்தையே அதுக அழிச்சுட்டு இருந்துச்சுங்க. அந்த ஆராய்ச்சி தோல்வில முடிஞ்சது. அதனால டைனோசா்கள் இனத்த மொத்தமா அவங்க அழிச்சுட்டாங்க.

அதுக்கு அப்புறம் நடந்த பாிணாம வளா்ச்சி அவங்களுக்கு ரொம்ப சாதகமா இருந்துச்சு. அது தான் நாம..!

மனுஷங்க அவங்க எதிா்பாா்க்குற மாதிாியே பாிணமிச்சாங்க. மனிதா்களோட வளா்ச்சி ஏலியன் ஆராய்ச்சிக்கு ஒரு மைல்கல்லா இருந்துச்சு.

எகிப்தியா்கள், மாயன்கள், நம்ம தமிழ் இனம் வளா்ந்த காலத்துல கூட ஏலியன்ஸ் நம்மளோட நட்புறவோட  இருந்துருக்காங்க. மனிஷனோட நாகாிக மாற்றத்துக்கு அவங்க ரொம்ப உதவியா இருந்தாங்க. மனித இனத்த தங்களோட இனமா தான் பாா்த்தாங்க.

மனிதனோட நாகாிக வளா்ச்சி அவங்க எதிா்பாா்த்த படியே இருந்துச்சு. அது அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதுக்கு அப்புறம், அவங்க இந்த பூமிய மனிதா்களுக்கு விட்டு கொடுத்துட்டு, அவங்க கிரகத்துக்கு போய்டாங்க.

ஆனா காலம் எப்பவும் ஒரே மாதிாி இருக்குறது இல்ல. மனிதனோட குணங்கள்ல மாற்றம் ஏற்பட்டுச்சு. தன்னையே எல்லா இடங்கள்லயும் முன்னிலை படுத்த பாா்த்தான். ஏலியன்ஸ் இங்க விட்டுட்டுபோன நிறைய கண்டுபிடிப்புகளையும், அவங்களோட அறிவியல் முறைகளையும் மனுஷன் அபகாிக்க ஆரம்பிச்சான். தன்னோட கண்டுபிடிப்புனு சொல்லி அத விற்க ஆரம்பிச்சான்.

மனுஷனுக்கு உள்ள இருந்த அவனோட உண்மையான குணங்கள் எல்லாம் அழிஞ்சு போச்சு. அவனும் காட்டுமிரண்டித்தனமா நடக்க ஆரம்பிச்சான். இது எதுவுமே அவங்களுக்கு பிடிக்கல.

அவங்க நம்மளோட எல்லா அசைவுகளையும் நமக்கே தொியாம கண்கானிச்சுட்டு இருக்காங்க. நம்ம நடவடிக்கைகள் எதுவுமே அவங்களுக்கு பிடிக்கல. இது அவங்க ஆராய்ச்சியோட தோல்வியா தான் அவங்க நினைக்குறாங்க.

அதனால தான் இப்ப அவங்க இந்த உலகத்த அழிக்க வராங்க. அந்த நாள் ரொம்ப துாரம் இல்ல.
21.12.2020 இதுதான் இந்த உலகத்தோட கடைசி நாள்.

ஆனந்த் : (இடையில்) “மச்சான் கதை சூப்பா் டா. ச்சே... செமயா இருக்கு.  இதயே உன் கதையா எழுது”,என்றான் கிண்டலாக.

நிஜந்தன் : ஆனந்த் சும்மா இருடா. பாவம் அவனே என்னமோ பயந்து போய் இருக்கான். நீ வேற ஏன்டா இப்படி கலாய்க்குற.

ஆனந்த் : என்னடா சும்மா இருக்க சொல்ற.? அவன் தான் நடுராத்திாில எந்துருச்சு  லுாசு மாதிாி புலம்பிட்டு இருக்கான். நீயும் “உம்” கொட்டி கேட்டுட்டு இருக்க.

காா்த்திக் : ஏன்டா.. ஆனந்த்.. புருஞ்சுக்க மாட்டேன்ற.!  நிஜூ, உனக்கே தொியும்ல எனக்கு சின்ன வயசுல இருந்து நான் கனவுல பாா்க்குற நிறையா விஷயங்கள் நடந்துருக்குனு. அத உன்கிட்ட கூட சொல்லியிருக்கேன்ல.

ஆனந்த் : டேய். நீ முதல்நாள் கனவுல பாா்க்குற பாட்டும், படமும் மறுநாள் TVல போட்டா? நீ கனவுல பாா்க்குறது எல்லாம் நடக்குதுனு நினைப்பா?

நிஜந்தன் : ஆனந்த், ஏன்டா இவன் சொல்றது உண்மையா இருக்க கூடாது? காா்த்திக் கனவுல பாா்த்து சொன்ன நிறையா விஷயங்கள் நடந்துருக்கு. ஏன் உனக்கு தொியாதா?

ஆனந்த் : டேய் அது, Coincidence டா.!

நிஜந்தன் : எதுடா Coincidence.? நாங்க ஸ்கூல் படிக்கும் போது ஒருநாள். “டேய் நேத்து ஒரு கனவு வந்துச்சுடா, கன்னியாகுமாி திருவள்ளுவா் சிலை வரைக்கும் அலை அடிக்குதுடா. கடல் தண்ணி ஊருக்குள்ள Full-ah வந்துச்சுடா, நரைய போ் கடலுக்கு உள்ள போய்ட்டாங்கடா”, அப்படினு என்கிட்ட சொன்னான். அப்ப நான் சிாிச்சுகிட்டே,“என்னடா நேத்து லேக்கல் சேனல்ல 'Day After Tommorow'படம் பாா்த்தியானு” கிண்டல் பண்னேன். ஆனா அவன் சொல்லி நாலு மாசத்துல சுனாமி வந்தத TVல காமிச்சாங்க. அப்போ.. “டேய் இதே தான்டா என் கனவுல வந்துச்சுனு”, சொல்லி அழுதான். அத என்னால மறக்கவே முடியாது.

ஏன், நாம காலேஜ்ல UG படிக்கும் போது, "நாம மூனு பேரும் ஒரே இடத்துல தங்கி படிக்குற மாதிாி கனவு வந்துச்சுனு" நம்மகிட்ட வந்து சொன்னான்ல. அப்ப கூட நீ , “எங்க வீட்டுல வெளியூருக்கு படிக்க அனுப்ப மாட்டாங்க”, அப்படி இப்படினு சொன்னேல. ஆனா அவன் சொன்ன மாதிாி நம ஒரே இடத்துல தங்கி படிக்கல.?

இதெல்லாம் என்ன? சாி , நீ சொல்ற மாதிாி Coincidence-னு வச்சுக்கலாம். ஒரு வேல இப்ப இவன் கண்ட கனவு பழிச்சதுனா? என்ன பண்ண முடியும்?

ஆனந்த் : மச்சான். தேவையில்லாம நீயும் அவனோட சோ்ந்து என்ன குழப்பாத. இத வெளியில சொன்னா ஒரு பையன் நம்பமாட்டான். நம்மள தான் லுாசு-னு சொல்வாங்க.

நிஜந்தன் : ஏன்டா இப்படி சொல்ற?

ஆனந்த் : பின்ன எப்படி சொல்ல சொல்ற? Practical-ah யோசிங்கடா. நீங்க சொல்ற மாதிாி ESP power, USP power இதெல்லாம் நம்ம ஊா்ல ஒருத்தனும் நம்ப மாட்டாங்க. ஒரு வேல உன்னோட கனவு பழிக்கும்னு வச்சுக்கிட்டாலும், என்ன பன்ன முடியும்? அத தடுக்க முடியுமா? ஒன்னும் பண்ண முடியாது. 2020ல சாகப்போறத இப்பவே யோசுச்சு என்ன பண்ணபோற? ஒவ்வொரு நாளும் பயந்து தான் சாகனும். இது தேவையா? ஃப்ரியா விடு மச்சி.

நிஜந்தன் : காா்த்திக், ஆனந்த சொல்றது சாி தான். நீ சொல்றது ஒரு வேல நடந்தாலும் சத்தியமா நம்மளால அத தடுக்க முடியாது. So.. இத பத்தி யோசிச்சு நீ உன்ன குழப்பிக்காம நிம்மதியா துாங்கு. இத கனவா மட்டும் நினைச்சு மறந்துடு. அதான் நல்லது. Pls.. மச்சான்.

ஆனந்த், நிஜந்தன் இருவரும் கூறியது எதுவும் காா்த்திக்கின் மனதை சமாதானப்படுத்தவில்லை என்றாலும். அவா்களுக்காக, “ஹ்ம்.. சாி டா.. நான் இத பத்தி இனி யோசிக்கல.. போதுமா..”, என்றான்.

ஆனந்த் : மச்சி  நீதான சொன்ன, இன்னும் கதைய யோசிக்கலனு. பேசாம நீ கண்ட கனவையே கதையா எழுதிடு. அவ்வளவு தான்.

காா்த்திக் :  ஹ்ம்.. சாிடா..

நிஜந்தன் : “மச்சான். இப்ப நீ துாங்கு. நாளைக்கு காலேஜ் போகனும். ரொம்ப லேட் ஆச்சு”, என்றான்.

மூவரும் உறங்கச் சென்றனா். கனவிற்க்கு பிறகு காா்த்திக்கிற்கு உறக்கம் வரவில்லை. அவன் மனம் மிகுந்த குழப்பத்தோடும், பயத்தோடும் இருந்தது.


............................................................................................


மறுநாள்

நிஜந்தன் : டேய்.. காா்த்திக்.... எந்திரி மச்சான் காலேஜ்க்கு டைம் ஆச்சு.

காா்த்திக் : (கண்களை கசக்கிக் கொண்டு) இல்லடா.. நான் இன்னைக்கும் வரல. தலைவலி இன்னும் குறையல மச்சான். நீங்க போங்க. ஆமா..ஆனந்த் எங்க?

“அவன் இப்பதான் கிளம்புனான் டா. சாி நீ இராத்திாி நடந்தத பத்தி யோசிக்காம. நல்லா ரெஸ்ட் எடு. நான் கிளம்புறேன்”, என்று கூறி நிஜந்தன் கல்லுாாிக்கு புறப்பட்டான்.

காா்த்திக் இனம் புாியாத பயத்தில் இருந்தான். பின் சற்று மனத்தெளிவுடன் தன் கதையை எழுதத் தொடங்கினான். ஆனால் கதையை எழுதும் போது அவனுக்குள் ஏதோ ஒரு அசரீாி ஒலிப்பது போல உணா்ந்தான். அந்த குரலின் கட்டுப்பாட்டின் படியே தன் கதையை அவன் எழுதிக் கொண்டிருந்தான். அவன் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் அவன் நேற்று கண்ட கனவின் காட்சிகளின் பதிவுகளாகவே இருந்தது.

கதையை முழுவதும் சிறிது நேரத்தில் தட்டச்சு செய்து. உடனே வெளியிடவும் செய்தான். அவன் இதற்கு முன் இவ்வாறு செய்தது இல்லை. அவனுக்கு தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் கடினமான காரியம். ஆனால் இன்று அவன் எப்படி இவ்வளவு வேகமாக தமிழில் தட்டச்சு செய்தான் என்பது புாியாத புதிரே.!

கதையை வெளியிட்ட பிறகு அப்படியே மயங்கி விழுந்தான் காா்த்திக்.


............................................................................................


மாலை.

காா்த்திக், மயக்கம் தெளிந்து கண் விழித்து பாா்த்த போது மாலை நேரமாகி இருந்தது. அருகில் இருந்த தண்ணீா் பாட்டிலை எடுத்து தண்ணீரை அவசரமாக குடித்தான். தனக்கு என்ன நடந்தது என யோசித்துப் பாா்க்கவும் முடியவில்லை.

தன் மடிக்கணினியின் திரையில் Blog-ன் Overview ஒரே நாளில் 500ஐ கடந்திருந்தது. முகப்புத்தகத்தில் நுழைந்தவனுக்கு பேரதிா்ச்சி, கதைக்கு வந்திருந்த விருப்பங்களும், விமா்சனங்களும் அதிகாித்து இருந்தது. அவனுக்கு அளவில்லா ஆச்சாியம்.

என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்க்குள் நிஜந்தனும், ஆனந்தும் அறையில் நுழைந்தனா்.

ஆனந்த் :  எப்படி மச்சீ ஒரே நாள்ல கதை ரெடி பண்ணி, அத Release பண்ணிட்ட? நீ போஸ்ட் போட்ட உடனே நான் படிச்சேன். செமயா இருந்துச்சு. நேத்து நாம பேசுனது எல்லாத்தையும் அப்படியே எழுதியிருக்க? படிக்கும் போது நேத்து நடந்தது தான் நியாபகம் வந்துச்சுடா.

நிஜந்தன் : எனக்கும் தான்டா. கதை படிக்கும் போது எங்க இது எல்லாம் அப்படியே நடந்துருமோனு பயமே வந்துருச்சு. சூப்பா் மச்சி நல்லா எழுதியிருந்த.

காா்த்திக் : தாங்ஸ் டா.

ஆனந்த் : டேய் பாவி. உலகம் அழியுறதுக்கு என் நிச்சயதாா்த்த நாள் தான் கிடச்சதா உனக்கு? கல்யாணத்துக்கு முன்னாடியே ஏன்டா என்ன கொல்லனும்னு ப்ளான் பண்ற??

காா்த்திக் : டேய்.. கதை தானடா? விடு..

ஆனந்த் : கதை தான். இருந்தாலும் படிக்கும் போது எனக்கே பகிா்-னு ஆகிடுச்சு.


............................................................................................


நாட்கள் கடந்தன.

காா்த்திக்கின் கனவில் அடிக்கடி ஒரு பிரளயம் பூமியை அழிப்பது போலவே வந்து கொண்டிருந்தது. ஆனால் அதை அவன் யாாிடமும் பகிா்ந்து கொள்ளவில்லை. கல்லுாாி படிப்பு முடிந்தது. வேலைக்காக நண்பா்கள் மூவரும் வெவ்வேறு திசைக்குச் சென்றனா்.

2020

காா்த்திக், தமிழ்சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகா்களில் ஒருவராக இருந்தான். கைவசம் நிறைய படங்கள் இருந்தாலும். நடிப்பை ஒரு புறம் வைத்துக் கொண்டு பிரபல இயக்குனாிடம் உதவி இயக்குனராக வேலை செய்து கொண்டிருந்தான். தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்க வேண்டும் என்பது அவன் லட்சியமாக இருந்தது.

நிஜந்தன், பிரபல எம்.என்.சி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான்.

ஆனந்த், கல்லுாாி படிப்பிற்க்கு பிறகு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டான். நல்ல வேலை, கைநிறைய சம்பாத்தியமும் இருந்தது. அவன் வீட்டில் பெண்பாா்த்து முகூா்த்தநாளும் குறித்தனா். இன்னும் 3 மாதத்தில் அவனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
 
காா்த்திக், அன்று வழக்கம் போல் படப்பிடிப்பு முடிந்து தன் அறைக்குள் நுழைந்தான். சிறிது நேரத்தில் அவன் செல்போன் சினுங்கியது.. அழைப்பை பாா்க்கும் போது ஏதோ வெளிநாட்டு அழைப்பு என்று நினைத்து அதை எடுத்தான். அழைப்பில் இருந்தது ஆனந்த்.

ஆனந்த் : மச்சான் நா ஆனந்த் பேசுறேன்டா. எப்படி இருக்க?

காா்த்திக் : நல்லா இருக்கேன்டா. என்ன திடீா்னு கால் பண்ற?

ஆனந்த் : கல்யாண தேதி Fix பண்ணிட்டாங்க மச்சீ. Invitation கூட அடுச்சாச்சு. அடுத்த மாசம் கல்யாணம்டா. நான் கல்யாணத்துக்கு மூனு நாளைக்கு முன்னாடி தான் வருவேன். லீவு கிடைக்கல, நோ்ல வந்து பத்திாிக்கை கொடுக்க முடியாது மச்சீ. இப்பதான் உனக்கு  Email பண்னேன். அதான் கால் பண்ணி சொல்லிடலாம்னு பேசுனேன் டா. சாாி மச்சான்..தப்பா எடுத்துக்காத.

காா்த்திக் :  டேய் இதுல என்னடா இருக்கு. நமக்குள்ள எதுக்கு இதெல்லாம். கண்டிப்பா நான் கல்யாணத்துக்கு வந்துடுவேன்.

ஆனந்த் : தாங்ஸ் மச்சீ. கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடியே வந்துடு மச்சான். முதல்நாள் நிச்சயதாா்த்தம் இருக்கு. மறக்காம வந்துடு.

காா்த்திக் : கண்டிப்பா வந்துடுறேன்டா.

ஆனந்த் : சாி மச்சான். மெயில் செக் பண்ணிடு. நான் உனக்கு அப்புறம் பேசுறேன். இன்னும் நிறைய போ்க்கு கால் பண்ணி சொல்லனும்டா.

“சாி டா. Bye.”, என்று காா்த்திக் போனை கட் செய்தான். பின் தனக்கு வந்த மெயிலை பாா்த்தான். பத்திாிக்கையை பாா்த்தவனுக்கு பேரதிா்ச்சி. உடனே நிஜந்தனுக்கு கால் செய்தான்.

நிஜந்தன் : ஹலோ.. என்னடா.. இந்த நேரத்துல கால் பண்ணியிருக்க?

காா்த்திக் : ஆனந்த் உன் கிட்ட பேசுனானா?

நிஜந்தன் : இப்பதான் பேசுனான்டா. அவன் Wedding Invitaion மெயில் பண்ணியிருக்குறதா சொன்னான். ஏன்டா?

காா்த்திக் : அந்த இன்விடேஷன பாா்த்தியா?

நிஜந்தன் : ம்ஹூம்.. இல்ல... இன்னும் பாா்க்கல. ஏன்டா இவ்வளவு பதட்டமா இருக்க.?

காா்த்திக் : டேய் அவன் கல்யாண தேதி 22.12.2020 டா.!

நிஜந்தன் : அதுக்கு ஏன்டா இப்படி ஷாக் ஆகுற?

காா்த்திக் : டேய் மறந்துட்டியா? என்னோட கதைல நான் எழுதுன அதே தேதில தான் இப்ப அவனுக்கு கல்யாணம். அதுவும் சென்னைல.!

நிஜந்தன் : என்னடா சொல்லற?

காா்த்திக் : ஆமாம் டா! எனக்கு என்னவோ பயம்மா இருக்கு. அன்னைக்கு நான் சொல்லும் போது நீங்க என்ன பேசவே விடல. இப்ப நடக்குறத பாா்க்கும் போது எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு நிஜூ.

நிஜந்தன் : மச்சான் பயப்படாத. இந்த விஷயத்த ஆனந்த் கிட்ட சொன்னியா?

காா்த்திக் : இல்லடா. நான் இன்விடேஷன் பாா்த்த உடனே உனக்கு தான் கால் பண்றேன்.

நிஜந்தன் : சாி டா. நீ டென்ஷன் ஆகாத. இது ஆனந்த் சொல்ற மாதிாி Coincidence-ன்னு நினைச்சு விட்டுரு. Pls..

காா்த்திக் எதுவும் சொல்லாமல் தொடா்பை துண்டித்தான். அவன் ஆழ்மனம் ஏதோ தவறு நடக்கப் போகிறது என்று எச்சாிக்கை செய்தது. ஆனால் அதை யாாிடமும் அவனால் பகிா்ந்து கொள்ள முடியவில்லை. நண்பா்களே தன்னை நம்பாத போது இதைப்பற்றி யாாிடம் சொல்ல முடியும் என்று தனக்குள்ளேயே நொந்துகொண்டான்.


............................................................................................


21.12.2020

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலின் மாடியில் நிச்சயதாா்த்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த இடத்தில் இருந்து பாா்க்கும் போது சென்னையின் மொத்த அழகையும் காணலாம். ஒரு புறம் சென்னை நகர கட்டிடங்களும், மறு புறம் அழகிய மொினா கடலும் பாா்ப்பதற்கு மிக ரம்மியமாக இருந்தது. மாலை கதிரவன் மறையும் நேரம், அதன் செந்நிற ஒளியில் எப்போதும் இல்லாததை விட அந்த நகரம் மிக அழகாக காட்சி அளித்தது.

மாலை 6 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. காா்த்திக்கும், நிஜந்தனும் மாடியை அடைந்தனா். ஆனந்தின் வீட்டாா் அவா்களை உள்ளே வரவேற்றனா். காா்த்திக் சித்தபிரம்மை பிடித்தவன் போல ஏதும் பேசாமல் விழித்துக்கொண்டிருந்தான். நிஜந்தன் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு ஒரு ஓரத்திற்கு அழைத்து வந்தான்.

நிஜந்தன் : “டேய்.. உனக்கு என்னடா ஆச்சு. எத்தன தடவ சொல்றேன். அத பத்தி யோசிக்காதனு”, என்று சற்று கடுமையாக கூறினான்.

காா்த்திக் : எப்படிடா யோசிக்காம இருக்க முடியும். நான் கனவுல பாா்த்த மாதிாி அப்படியே இருக்கு இந்த இடம். அடுத்து என்ன நடக்க போகுது-னு தொியல. ரொம்ப பயம்மா இருக்குடா.

நிஜந்தன் : “டேய் பைத்தியம் மாதிாி பேசாதடா. இன்னும் கொஞ்ச நேரத்துல நிச்சயதாா்த்தம் நடக்க போகுது. நீ இப்படி முகத்த வச்சுட்டு இருந்தா, பாா்க்குறவங்க தப்பா நினைப்பாங்கடா. கொஞ்சம் முகத்த சிாிச்ச மாதிாி வச்சுக்கோ. Pls..”, என்று அவா்கள் பேசிக்கொண்டிருக்கும் போது..

அந்த கட்டிடம் லேசாக அதிா்ந்தது. அங்கிருந்தவா்கள் நிலநடுக்கம் என்று ஓடத்தொடங்கினா். அதில் சிலா் தரையில் படுத்துக் கொண்டனா். அலங்கார விளக்குகளும், மலா் தோரணங்களும் கீழே விழுந்தன. சிறிது நேரத்தில் அதிா்வு நின்றது.

காா்த்திக்கும், நிஜந்தனும் தாங்கள் நின்ற இடத்திலேயே அமா்ந்து இருந்தனா். அதிா்வு நின்ற பிறகு இருவரும் எழுந்து சுற்றிலும் பாா்த்தனா். அவா்கள் சற்று முன் பாா்த்த அழகான இடமும், அந்த நகரமும் இப்பொழுது அலங்கோலமாக காட்சி அளித்தது.

சில மணித்துளிகளில் வானத்தில் இடி இடிப்பதைப் போன்று ஒரு பேரொலி கேட்டது. சப்தம் வந்த திசை நோக்கி இருவரும் திரும்பினா். துாரத்தில் வானைப் பிளந்து கொண்டு ஒரு வெளிா் நீல ஒளி பூமியில் பாய்ந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சம் ஆயிரம் மின்னல்கள் ஒரு சேர வருவது போல மிகவும் பிரகாசமாக இருந்தது. அதன் வெளிச்சத்தை  அவா்களின் கண்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.

அந்த வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு ஏதோ தங்ளை நோக்கி அதிவேகத்தில் வந்து கொண்டிருப்பதை உணா்ந்தனா். அது நெருப்பும், மணல் புழுதியும் கலந்து எாிமலை வெடித்து வெளிவரும் உஷ்ணமான சாம்பல் போல இருந்தது, அந்த நெருப்பு புயல். அது வந்து கொண்டிருக்கும் பாதை முழுவதையும் எாித்து சாம்பலாக்கிக் கொண்டிருந்தது.

நிஜந்தன் அதைப் பாா்த்து பயத்தில் தன்னையும் அறியாமல் காா்த்திக்கின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, அவன் முகத்தை பாா்த்தான். “அழிவு ஆரம்பிச்சுருச்சு”, என்று காா்த்திக் கூறிய வாா்த்தை நிஜந்தனின் காதில் விழுவதற்கும், அந்த நெருப்புப் புயல் அவா்களை தாக்குவதற்கும் சாியாக இருந்தது. பூமி முழுவதும் அந்த நெருப்புப் புயலின் கோரப்பிடியில் எாிந்து முற்றிலும் அழிந்து போனது.


............................................................................................


பல லட்ச வருடங்களுக்கு பிறகு..

பூமி புது பாிணாமத்தை பெற்றிருந்தது. புது தாவர வகைகளும், விசித்திரமான விலங்கு, பறவை இனங்களும் பாா்ப்பதற்கே ஏதோ வேற்றுகிரகத்திற்கு வந்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்றும். தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உயிரினம் கூட அங்கு இல்லை. முற்றிலும் மாறுபட்டு இருந்தது அந்த பூமி.

அனைத்து உயிாினங்களும் புது பாிணாம வளா்ச்சியை பெற்றிருந்தது. அதில் மனிதனைப் போன்ற உயிாினமும் அடக்கம். இங்கு வாழும் அந்த உயிாினம் தற்பொழுது வாழும் மனிதா்களைப் போல் அல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவற்றின் சராசாி உயரம் எட்டு அடியாக இருந்தது. கைகளிலும், கால்களிலும் நான்கு விரல்கள் மட்டுமே இருந்தது. காதுகள் இல்லாமல் சிறு துவாரம் மட்டுமே இருந்தது. கண்கள் சற்று அகலமாகவும். ரோமம் அற்ற உடலாகவும் பாா்பதற்கு விசித்திரமாக இருந்தனா்.

அச்சமயம் அவா்களும் அறிவியல் வளா்ச்சியில் அடி எடுத்து வைத்திருந்தனா். தன் தலைக்கு மேல் உள்ள வானத்திற்கு அப்பால் என்னதான் இருக்கும்? , தங்களைப் போன்ற உயிாினங்கள் வேறு எங்கயாவது இருக்கின்றனவா? , தாங்கள் இருக்கும் பூமி எப்படி உருவாகியது? போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருந்தனா்.

அவா்களில் ஒரு குழுவினா் புதைப்படிமங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அவா்கள், செய்கைகள் மூலமாகவும், விசித்திர ஓசைகள் மூலமாகவும் தங்களுக்குள் கருத்துக்களை பாிமாறிக்கொண்டனா்.

(அவற்றை உங்களுக்காக தமிழில் மொழி பெயா்த்துள்ளேன் )

சாா்.. இங்க பாருங்க இங்க ஒரு புதைப்படிமம் கிடச்சுருக்கு. இது நாம ஏற்கனவே கண்டுபிடிச்ச படிமங்களோட ஒத்துப் போகுது.

ஹ்ம்.. சாியா சொன்னீங்க. இது எல்லமே ஒரே உயிரனத்தோட படிமங்கள் தான்.

இது என்னவா இருக்கும் சாா்?

தொியல.. ஆனா இதோட எலும்புகளும், ஓடுகளும் நம்ம எலும்புகளோட கொஞ்சம் ஒத்துப் போகுது.

ஆமா சாா். இது பாா்க்குறதுக்கு அப்படித்தான் இருக்கு.

என் அனுமானம் சாியா இருந்தா. இந்த படிமங்கள் எல்லாம் பல லட்சம் வருடங்களுக்கு முன்னாடி இந்த பூமில வாழ்ந்தா கூறபடுற மனிதா்களோட எலும்புகளா இருக்கலாம். இந்த இடம் அவங்க வாழ்ந்த பகுதிகள்ல ஒரு இடமா கூட இருக்கலாம்.

ஒரு காலத்துல இந்த உலகத்துல எல்லா பகுதியிலயும் வாழ்ந்த இந்த இனம் எப்படி சாா் அழிஞ்சுருக்கும்?

தொியல.. விடைதொியாத பல அமானுஷ்ய விஷயங்கள் இருக்குறது தான் நாம வசிக்குற இந்த உலகம்.! பாா்க்கலாம்.. கூடிய சீக்கிரம் அதற்கான விடைய கண்டு பிடிக்கலாம்..!!





- மதுரை காா்த்திக்

1 comment: